👌👌 குட்டி கதை 👌👌
*குட்டி கதை - கைத்தொழில்*
ஒரு பெரிய நகரத்தில் இருந்த பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் அவரின் கடை மிகப் பிரபலம். ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே, நீங்க நல்லா நிர்வாகம் பண்றீங்க. தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க, இதுவே என்னைப் போல பெரிய கம்பெனியில் நீங்க வேலையில் இருந்திருந்தால் நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேறியிருக்கலாம் என்றார்.
பெரியவர் புன்னகைத்துவிட்டு, இல்லை. நான் உங்களை விட நன்றாகவே முன்னேறியிருக்கிறேன். எப்படி? பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் கூடையில் சமோசா விற்றபோது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க. அப்பொழுது என் வருமானம் மாதம் இரண்டாயிரம் ரூபாய். உங்கள் வருமானம் மாதம் இருபதாயிரம்.
நீங்கள் இப்பொழுது இந்த கம்பெனியில் மேனேஜர் ஆகி விட்டீர்கள். மாதம் இரண்டு லட்சம் சம்பளம் வாங்குகிறீர்கள். இப்பொழுது எனக்கு சொந்தமாக இந்த கடை இருக்கிறது. எனக்கு நல்ல பேர் இருக்கு. நான் மாதம் ஒரு லட்சம் அல்லது அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாதிக்கிறேன். நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும். அவர்கள் என்னைப்போல இல்லாமல் நேரடியாக முதலாளியாக வந்து கடையை முன்னேற்றத்திற்கு கொண்டு வந்தால் போதும் என்றார்.
ஆனால் உங்களுக்கு அப்படியில்லை. உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது. உங்களின் இத்தனை வருட உழைப்பின் பலன் உங்கள் முதலாளியின் மகனுக்குத்தான் போகும். உங்கள் மகன் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும். நீங்கள் அனுபவித்த அவ்வளவு கஷ்டத்தையும் அவனும் அனுபவிப்பான். உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்களே எண்ணிப் பாருங்க என்றார். ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம் என்றார். மேனேஜர் சமோசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு மௌனமாகச் சென்று விட்டார்.
*நீதி:-*