நாட்டு வைத்தியம்

:**சிவ சித்தர்கள் மூலிகை** 

:herb:சளியை விரட்டும் இஞ்சிப் பால்.  

ஒருவர், ஒருவேளை குடிக்கக்கூடிய அளவுக்கு  
இஞ்சி ப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கவும்.

தோல் சீவிய  
இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடவும்.

தண்ணீரில் இஞ்சிசாறு முழுவதும் இறங்கி விடும்.

பிறகு வடிகட்டி சாறை எடுத்துக் கொள்ளவும்.

அப்புறம் அரைக்குவளை காய்ச்சிய பால் எடுத்துக் கொண்டு அத்துடன் வடிக்கட்டிய இஞ்சிசாறைகலந்து கொள்ளவும்.

அத்துடன் தேவை யான அளவில் தேன் அல்லது பணங்கற் கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவு தான்.

இஞ்சிப் பால் தயார்.

இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கவும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன நடக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3.வாயுத்தொல்லை என்பதே வராது

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடைகொடுத்து  
விடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும்.

அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு  
சினைப்பையில் வரக் கூடிய புற்று நோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3.வயசுக்குமேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம் .

இந்த இஞ்சிப் பாலை யார் யார் சாப்பிட க்கூடாது?

வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சலால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் கண்டிப்பாக‌ தவிர்க்க வேண்டும்.  
  
:fallen_leaf:சிவ சித்தர்கள் மூலிகை :fallen_leaf:

Popular posts from this blog

🌹🌹 blessed with the daughters 🌹🌹

🌹🌹உங்கள் மதிப்பை 🌹🌹

🙏🙏 Once the famous sufi saint 🙏🙏